ராஜஸ்தானில் இருந்து சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், கிராமப்புறத்தைச் சேர்ந்த ஒரு பெண், சிறுத்தைக்கு ராக்கி கட்டும் அபூர்வமான காட்சி பதிவாகியுள்ளது. தனது வீட்டிற்கு அருகிலுள்ள வயல்வெளி ஓரத்தில் அமர்ந்திருந்த பெண்ணின் முன்னால், சிறுத்தை அமைதியாக அமர்ந்துள்ளது. அந்தப் பெண் அதன் பாதத்தை பிடித்து கவனமாக ராக்கி கட்டி, இனிப்புகள் ஊட்ட முயற்சிக்கிறார். ஆச்சரியமாக, சிறுத்தை எந்த ஆக்ரோஷமும் காட்டாமல் அமைதியாக இருக்கிறது.

தகவலின்படி, கடந்த சில நாட்களாக அந்த சிறுத்தை கிராமப்பகுதியில் சுற்றித்திரிந்துள்ளது. மனிதர்களை கண்டு பயப்படாத அது, பலமுறை கிராமத்தில் நடமாடுவது காணப்பட்டதாக உள்ளூர் மக்கள் கூறுகின்றனர். இதேசமயம், வனத்துறையினர், இந்த காட்சி உணர்ச்சிவசப்பட்டதாக இருந்தாலும் மிக ஆபத்தானது என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். “சிறுத்தை போன்ற காட்டு விலங்குகள் கணிக்க முடியாதவை, எந்த நேரத்திலும் தாக்கக்கூடும். மக்கள் விலகி இருக்க வேண்டும்” எனவும், சிறுத்தையை பாதுகாப்பான இடத்திற்கு மாற்றும் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என்றும் தெரிவித்துள்ளனர்.

இந்த வீடியோ இணையத்தில் பெரும் கவனத்தை பெற்றுள்ளது. பல நெட்டிசன்கள், “விலங்குகளுக்கு காட்டப்படும் பாசம் மனதை தொட்டது” என்று பாராட்டினாலும், சிலர் சிறுத்தையின் நிலை குறித்து சந்தேகம் எழுப்பியுள்ளனர். “அது சுற்றுப்புறத்தை சரியாக உணராதது போல் தெரிகிறது… உடல்நிலை சரியில்லையா அல்லது போதையில் இருந்ததா?” என ஒருபக்கம் கேள்விகள் எழுப்பப்படுகின்றன.

ஒரு பயனர், “இது ஒரு காட்டு வேட்டையாடும் விலங்கின் மீது காட்டப்படும் அன்பா, அல்லது உண்மையான அன்பு காட்டு விலங்குகளை காட்டுத்தனமாகவும் சுதந்திரமாகவும் இருக்க விடுவதாக இருக்க வேண்டுமா?” என சிந்திக்க வைக்கும் கருத்து என்று தெரிவித்துள்ளார்.