பொதுவாக ஒவ்வொருவரும் தங்களுடைய வாழ்நாளில் மூன்றுக்கும் மேற்பட்ட வங்கி கணக்கு பயன்படுத்தி வருகிறார்கள். பள்ளியில் படிக்கும் போது ஒரு கணக்கு, வேலை செய்யும் ஊழியர்களுக்கு சம்பளத்தை டெபாசிட் சம்பள கணக்கு, என ஒருவரே எக்கச்சக்கமான சேமிப்பு கணக்கை வங்கிகளில் வைக்கின்றார். இந்த நிலையில் ஒருவர் எத்தனை வங்கி கணக்கு தொடங்கலாம் என்பது குறித்தும் ஒன்றுக்கு மேற்பட்ட வங்கி கணக்கு வைத்தால் என்ன நடக்கும் என்று குறித்து  ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. அதாவது ஒரு வாடிக்கையாளர் எத்தனை கணக்குகளை தொடங்கலாம் என்பதற்கான விதிமுறைகளையும் வகுத்துள்ளது.

அதாவது வங்கியில் மொத்தமாக சேமிப்பு கணக்கு, கூட்டு கணக்கு அடிப்படையில் அக்கவுண்ட் திறக்கலாம். அதாவது சேமிப்பின் அடிப்படையில் கணக்கை திறக்க விரும்பினால் வட்டியுடன் கூடிய சேமிப்பு கணக்கு தொடங்கும்படி வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் வாடிக்கையாளர்கள் வங்கி கணக்கு திறந்து பயன்படுத்தாமல் தொடர்ந்து பயன்படுத்தும் படி அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் புதிய வங்கி கணக்கை திறக்க நேரிட்டால் ஏற்கனவே வைத்திருக்கும் கணக்கை மொத்தமாக மூடிவிட்டு புதிய கணக்கை திறக்க வேண்டும் எனவும் ரிசர்வ் வங்கி உள்ளது.