கேரளாவின் காசர்கோட்டில் கொசு மருந்து குடித்த 1 1/2 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காசர்கோடு கள்ளரப்பா பாபா நகரை சேர்ந்த ஹன்சிபா மற்றும் ரம்ஷீத் தம்பதியின் மகள் ஜெசா வீட்டில் வைத்திருந்த கொசு மருந்தை தவறுதலாக எடுத்து குடித்துள்ளார்.

அதன் பிறகு மங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக குழந்தை அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று உயிரிழந்தது. நச்சு பொருளான கொசு மருந்தை உட்கொண்டதால் நுரையீரல் செயலிழந்து உயிரிழப்பு ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.