அத்வானிக்கு பாரத ரத்னா வழங்கப்படுவது குறித்து பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்பு அரசியலை வளர்த்தெடுத்தவர், மண்டல கமிஷனின் ஓபிசி இந்து சமூகத்தினருக்கான ஒதுக்கீட்டை எதிர்த்து விபிசிங் ஆட்சியை கவிழ்த்தவர்.

ரத யாத்திரை என்ற பெயரில் ரத்த யாத்திரை நடத்தி சூத்திர இந்துக்களுக்கு எதிரான வன்முறையை கட்டவிழ்த்து விட்டவர். பாமர் மசூதி இடிப்புக்கான இஸ்லாமிய வெறுப்பு வேள்வியை நடத்தியவர் என்ற இத்தகைய சாதனைகளை பாராட்டியே அத்வானிக்கு பாரத ரத்னா விருதுகளை மோடி அரசு வழங்குகின்றது என திருமாவளவன் விமர்சித்துள்ளார்.