ஒடிசாவில் ரயில் விபத்தில் 250 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது மற்றும் 900க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்ததற்கு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பிரதமர் ட்ரூடோ தனது ட்விட்டர் பக்கத்தில், “இந்தியாவின் ஒடிசாவில் நடந்த ரயில் விபத்து பற்றிய படங்கள் மற்றும் அறிக்கைகள் என் இதயத்தை உடைக்கிறது” என்று தெரிவித்துள்ளார். “இந்த கடினமான நேரத்தில், கனடியர்கள் இந்திய மக்களுடன் நிற்கிறார்கள்,” என்று அவர் கூறினார்.