மத்தியப் பிரதேசம் கஜுராஹோ அருகிலுள்ள மௌமசானியா கிராமத்தில் வசிக்கும் ரிங்கி அஹிர்வார் என்ற பெண், “நான் பாம்புக் குட்டிகளைப் பெற்றேன்” என்று சொன்னதுடன், அப்பகுதியில் பெரிய பரபரப்பு எழுந்தது. 2, 3, 7 என எண்ணிக்கை மாறி வதந்திகள் பரவ, கிராம மக்கள் அவரது வீட்டுக்கு கூட்டமாக வந்து, பிளாஸ்டிக் கிண்ணத்தின் கீழ் “பாம்புக் குட்டிகள்” வைக்கப்பட்டிருக்கிறது என்று பேச்சு பரவியது. இதனால் அங்கு அச்சமும், ஆர்வமும் கலந்த சூழல் நிலவியது.
பின்னர் ரிங்கியை ராஜ்நகர் அரசு சுகாதார மையத்துக்கு அழைத்து சென்றனர். அங்கு பிளாக் மெடிக்கல் ஆபிசர் டாக்டர் அவதேஷ் சதுர்வேதி பரிசோதனை செய்து, ரிங்கி கர்ப்பமாக இல்லை என்றும், பாம்புக் குட்டி என்று நினைத்தவை உண்மையில் நீளமான நூல் போன்ற இரத்தக் கட்டிகள் என்றும் உறுதி செய்தார். அந்தக் கட்டிகள் சிறிது நேரத்தில் கரைந்துவிட்டதாகவும் தெரிவித்தார். சிறிய அளவில் வயிற்று வலி தொடர்ந்ததால், சத்தர்பூர் மாவட்டத்தில் அல்ட்ராசவுண்ட் செய்ய பரிந்துரைக்கப்பட்டது.
#WATCH | #Chhatarpur Woman Gives Birth To Snakes? District Hospital Doctor Clarifies#MadhyaPradesh #MPNews #snakes pic.twitter.com/j0dq88ppFg
— Free Press Madhya Pradesh (@FreePressMP) August 7, 2025
“>
மனிதர்கள் பாம்பு போன்ற ஊர்வனவற்றை “பிறப்பது” உயிரியல் ரீதியில் முற்றிலும் சாத்தியமற்றது என்று நிபுணர்கள் மீண்டும் வலியுறுத்தினர். சமூக ஊடகங்களில் பரவிய வீடியோக்கள் தவறான தகவல்களாக இருப்பதால், மாவட்ட மருத்துவமனை நிர்வாகம் உடனடியாக விளக்கம் வழங்கி வதந்திகளை முடிவுக்கு கொண்டுவந்தது. மக்கள், மருத்துவ ஆலோசனைகளையே நம்பி, மூடநம்பிக்கைகள் மற்றும் சரிபார்க்கப்படாத தகவல்களை பகிர்வதை தவிர்க்க வேண்டும் என்று அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர்.
