ஐசிசி டி20 உலக கோப்பை போட்டி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் ஜூன் 1ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்க இருக்கிறது. இந்நிலையில் டி20 உலக கோப்பை போட்டியில் பங்கேற்க தென்னாப்பிரிக்கா அணியில் இடம் பெற்றுள்ள வீரர்கள் குறித்த அறிவிப்பை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

அதன்படி கேப்டன் ஐடன் மார்க்ரம் தலைமையிலான 15 வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தென்னாப்பிரிக்க அணியில் ஒட்னியல் பார்ட் மேன், ஜெரால்டு கோட்ஸி, குயின்டன் டி காக், ஜார்ன் போர்டுயின், ரீசா ஹென்ட்ரிக்ஸ், மார்கோ ஜான்சன், ஹென்ரிச் கிளாசென், கேசவ் மகாராஜ், டேவிட் மில்லர், அன்ரிச் நார்ட்ஜே, ககிசோ ரபாடா, ரியான் ரிக்கல்டன், தப்ரைஸ் ஷம்சி, டிரிஸ்டன் ஸ்டப்ஸ் ஆகியோரிடம் பெற்றுள்ளனர். மேலும் மாற்று வீரர்களாக நந்த்ரே பர்கர், லுங்கி என்கிடி ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.