மத்திய இடைநிலை கல்வி வாரியமான சிபிஎஸ்இ பள்ளிகள் அதன் காலண்டரை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்றும் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் ஒன்றாம் தேதிக்கு முன்பு அடுத்த ஆண்டுக்கான கல்வி அமர்வை தொடங்கக்கூடாது என்றும் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

சில பள்ளிகள் இந்த ஆண்டு தொடக்கத்தில் தங்கள் கல்வி அமர்வை தொடங்கியுள்ளதாக சிபிஎஸ்இ வாரியம் தெரிவித்துள்ளது. குறைந்த கால கெடுவுக்குள் ஒரு முழு ஆண்டுக்கான பாடத்திட்டத்தை முடிக்க முயற்சிப்பது மாணவர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்துவதோடு கவலை மற்றும் சோர்வுக்கு வழிவகுக்கும் என்று சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளது.