இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடி சம்பவங்கள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. இது தொடர்பாக அரசு தரப்பில் மக்களுக்கு பல எச்சரிக்கை அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வந்தாலும் மோசடிக்காரர்கள் தினம் தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் விமான நிலையம் மற்றும் ரயில் நிலையம் போன்ற பொது இடங்களில் இலவசமாக கீ செயின் விற்றுக்கொண்டே கிரிமினல்கள் உதவுவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. Key chain களில் track செய்யும் சிப்புகள் பொருத்தப்பட்டுள்ளதால் உங்கள் வாகனம் மற்றும் உங்கள் இருப்பிடம் அறியப்படும். இதை வைத்து நீங்கள் செல்லும் பாதையை தெரிந்து கொண்டு திருடுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இந்த ப்ரீ கீ செயின் விலை வாங்க வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.