கர்நாடக மாநிலத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் தற்போதைய அங்கு அரசியல் களமானது விறுவிறுப்பு அடைந்துள்ளது. அந்த வகையில் நேற்று நடந்த காங்கிரஸ் இளைஞர்கள் மாநாட்டில் பங்கேற்று பேசிய ராகுல் காந்தி வேலை இல்லாமல் இருக்கும் பட்டாதாரி இளைஞர்களுக்கு மாதம் 3000 பணமும், டிப்ளமோ படித்தவர்களுக்கு 1500 உதவி தொகையும் வழங்கப்படும் என்று கூறியுள்ளார். மேலும் முதல் இரண்டு வருடத்திற்கு இந்த உதவி தொகையும் பின் வேலை வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்படும் எனவும் வாக்குறுதி கொடுத்துள்ளார்.