சிவகங்கை மாவட்டத்தில் உள்ள எஸ்.புதூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டம் மற்றும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல வாரியம் சார்பாக மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச முகாம் நடைபெற்றது. இதற்கு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பத்மநாபன், சந்திரா, வட்டார வளமைய மேற்பார்வையாளர் ராதாகிருஷ்ணன் போன்றோர் தலைமை தாங்கியுள்ளனர்.

இந்த மருத்துவ முகாமில் எஸ்.புதூர் வட்டாரத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் சுமார் 160 பேர் கலந்து கொண்டனர். இதில் தேசிய அடையாள அட்டை, உதவித்தொகைகான பதிவு, உதவி உபகரணங்கள், காது, மூக்கு, தொண்டை, கண், எலும்பு, மூட்டு, மனநல மருத்துவர்கள் கலந்து கொண்டு மருத்துவ செய்திகளை வழங்கினர். இதில் கலந்துகொண்ட மாற்றுத்திறனாளிகளுக்கு மதிய உணவு மற்றும் போக்குவரத்து பயணப்படி வழங்கப்பட்டது.