விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான நீயா நானா நிகழ்ச்சி ஒவ்வொரு வாரமும் ஏதாவது ஒரு தலைப்பு கொண்டு விவாதிக்கப்படும். இந்த நிகழ்ச்சி ஆரம்பித்த முதல் நாளிலிருந்து கோபிநாத் தொகுத்து வழங்கி வருகின்றார். இந்நிலையில் இந்த வாரம் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியின் சில காட்சிகள் வெளியாகி மக்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது.

அதாவது இந்த வாரம் புதிய சின்னத்திரை பிரபலங்கள் மற்றும் பழைய சின்னத்திரை பிரபலங்கள் என்று விவாதிக்கப்பட்டது. அப்போது புதிய சின்னத்திரை பிரபலங்களின் பக்கத்தில் இருந்த நடிகை ஒருவர் திடீரென ஏ கோபி எவ்வளவு தைரியம் இருந்தால் என்னிடம் கேள்வி கேட்பாய் என்று ஆவேசமாக பேசியுள்ளார். இருந்தாலும் இதனை சற்று எதிர் பார்க்காத பிரபலங்கள் அனைவரும்வாயடைத்துப் போன நிலையில் கோபிநாத் இதழை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் சிரித்துக்கொண்டு நிற்பது போன்ற ப்ரோமோ காட்சி தற்போது வெளியாகி உள்ளது.