சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள காசி விசுவநாதர் கோயில் குடமுழுக்கு விழா கோலாகலமாக இன்று நடைபெற்றது. கடந்த இரண்டு ஆண்டுகளில் அறநிலையத்துறை சார்பில் நடைபெறும் 1000வது குடமுழுக்கு விழா இதுவாகும். முதல்வர் ஸ்டாலின் பதிவிட்டுள்ள எக்ஸ் (ட்விட்டர்) பதிவில், ”எல்லார்க்கும் எல்லாம்” என்ற திராவிட மாடல் ஆட்சியில் அனைத்துத் துறைகளும் அதிவேகமாக வளர்ந்து வருகிறது.

குறிப்பாக இந்து அறநிலைத்துறை செயல்பாடுகள் அனைத்திலும் சிறப்பாக இருக்கின்றன என ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். இறை நம்பிக்கையாளர் அனைவரும் போற்றும் இணையற்ற ஆட்சியாக திமுக அரசு செயல்பட்டு வருகிறது” என பதிவிட்டுள்ளார்.