இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி ஜீவன் தாரா என்ற புதிய ஓய்வூதிய காப்பீடு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் திட்டம் ஜனவரி 22ஆம் தேதி முதல் செயல்பாடு வர உள்ளது. சேமிப்பு திட்டத்துடன் கூடிய பங்கு சந்தை சாராத ஓய்வூதிய திட்டம் ஆகும். இந்தத் திட்டத்தின் மூலம் 20 முதல் 80 வயது வரை உள்ள நபர்கள் பயன்பெற முடியும். வயதில் மூத்த பாலிசிதாரர்களுக்கு அதிக ஓய்வூதிய வசதி உள்ளிட்ட பல்வேறு வகையான சிறப்பு அம்சங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.