ஆஸ்கர் விருது வென்ற “எலிபெண்ட் விஸ்பரர்ஸ்” என்ற ஆவணப் படத்தில் நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்த பெள்ளிக்கு அரசு வேலை வழங்கப்பட்டுள்ளது. தெப்பக்காடு யானைகள் முகாமில் முதல் பெண் பராமரிப்பாளராக நியமித்து, பெள்ளிக்கு  பணி நியமன ஆணையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். அண்மையில் பெள்ளியை பிரதமர் மோடி மற்றும் தோனி சந்தித்திருந்தது குறிப்பிடத்தக்கது.