2026 ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரின் போது, இந்திய அணியினரை உற்சாகப்படுத்துவதற்காக அப்போதைய கேப்டன் சூர்யகுமார் யாதவ் ‘தூம் 3’ திரைப்படத்தில் வரும் வசனத்தை முழக்கமாகப் பயன்படுத்தியதாக ஆல்-ரவுண்டர் அக்சர் படேல் ஒரு நேர்காணலில் பகிர்ந்துள்ளார்.
கைகளை விடாதீர்கள், துணையாக இருங்கள் என்ற அந்த வசனம், வீரர்களிடையே ஒற்றுமையையும் நம்பிக்கையையும் வளர்க்கப் பயன்படுத்தப்பட்டது. நியூசிலாந்துக்கு எதிரான இறுதிப் போட்டியில் 96 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, இந்தியா கோப்பையைக் கைப்பற்றியதில் இந்த முழக்கத்திற்கு முக்கியப் பங்கு உண்டு என அவர் தெரிவித்தார்.
அக்சர் படேல் அந்த நேர்காணலின் போது, உலகக்கோப்பை வென்ற இந்திய அணியின் அனைத்து வீரர்களும் கையெழுத்திட்ட ஜெர்சியைக் காட்டினார். அந்த ஜெர்சியின் மேல் இடது மூலையில் சூர்யகுமார் யாதவ் இந்த வசனத்தை எழுதியிருந்தார். போட்டிகளின் போது அணி இக்கட்டான சூழலில் இருக்கும்போதெல்லாம், வீரர்களை உற்சாகப்படுத்த சூர்யகுமார் இந்த வார்த்தைகளைத் திரும்பத் திரும்பக் கூறுவார் என்று அக்சர் நினைவு கூர்ந்தார்.
Axar Patel has collected the autographs of every player from India’s T20 World Cup-winning squad on his jersey. At the top, it written, “hath nahi chorna sath nahi chorna” a slogan written by Suryakumar Yadav. Suryakumar used this slogan throughout the World Cup. Whenever they… pic.twitter.com/2LGgLag71v
— 𝐑𝐮𝐬𝐡𝐢𝐢𝐢⁴⁵ (@rushiii_12) July 8, 2026
“>
இந்த முழக்கம் தற்செயலாகத் திரைப் படத்தின் வசனத்தோடு ஒத்துப்போகிறதா அல்லது திட்டமிட்டுப் பயன்படுத்தப்பட்டதா என்பது தெரியவில்லை என்றாலும், இந்திய அணியின் வெற்றிப் பயணத்தில் இது ஒரு உத்வேகமாக அமைந்திருந்தது.
