அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்த முன்னாள் MLA-க்கள் தொடர்பாக சபாநாயகர் JCD பிரபாகர் இன்று அதிரடி விசாரணை நடத்தவுள்ளார். அதிமுகவில் இருந்து வெளியேறி இந்த அதிரடி ராஜினாமாவிற்கு பிள்ளையார் சுழி போட்டவர் மரகதம் குமரவேல் ஆவார்; இவரைத் தொடர்ந்து முதலாவதாக ஜெயக்குமார் மற்றும் சத்தியபாமா ஆகியோரும் தங்களது பதவிகளைத் துறந்துவிட்டு முறைப்படி தவெகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

​இந்நிலையில், அவர்கள் அளித்த ராஜினாமா கடிதங்களில் போதிய விளக்கங்கள் மற்றும் தெளிவான காரணங்கள் குறிப்பிடப்படவில்லை என சபாநாயகர் JCD பிரபாகர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, ராஜினாமா கடிதத்தின் உண்மைத்தன்மை மற்றும் பின்னணியை ஆராய்வதற்காக ஜெயக்குமார், மரகதம் குமரவேல், சத்தியபாமா ஆகிய 3 பேரிடமும் சபாநாயகர் இன்று நேருக்கு நேர் விசாரணை நடத்தவுள்ளதால் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது.