டைரக்டர் வெங்கட்பிரபு, நாக சைதன்யா உடன் கைகோர்த்துள்ளார். இந்தப் படத்திற்கு “கஸ்டடி” என பெயரிடப்பட்டு உள்ளது. இப்படத்தில் கதாநாயகியாக க்ரீத்தி ஷெட்டி நடிக்கிறார். இந்த படத்திக்கு இளையராஜா, யுவன் ஷங்கர்ராஜா ஆகிய இருவரும் இணைந்து இசையமைக்கின்றனர். படப்பிடிப்பு முடிவடைந்து இருப்பதை படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்திருந்தது.

இந்நிலையில் நாக சைதன்யா, இசையமைப்பாளர் இளையராஜாவை சந்தித்து பேசியுள்ளார். இச்சந்திப்பு பற்றி நாகசைதன்யா தன் டுவிட்டர் பக்கத்தில், “மேஸ்ட்ரோ இளையராஜாவை சந்தித்தபோது என் முகத்தில் மிகப் பெரிய ஆனந்தம் என்றும் அவரது இசை என்னுடைய வாழ்க்கை பயணத்தில் நிறைந்துள்ளது என்றும் பதிவிட்டுள்ளார்.