தமிழில் தீரன் அதிகாரம் ஒன்று எனும் திரைப்படத்தின் வாயிலாக பிரபலமாகி முன்னணி நடிகையாக வலம் வருபவர் ரகுல் பிரீத் சிங். இவர் தன் திருமணம் பற்றி வெளியாகும் வதந்திகளுக்கு தற்போது விளக்கமளித்துள்ளார். அவர் கூறியதாவது “என் திருமணம் பற்றி தொடர்ந்து வதந்திகள் பரவி வருகிறது.

மேலும் எனக்கு திருமணம் முடிந்துவிட்டது எனவும் பேசுகின்றனர். எப்போது தனக்கு திருமணம் நடந்தது என்று யாராவது சொல்ல முடியுமா..? வாரந்தோறும் என்னை பற்றி புதிது புதிதாக தகவல் வந்துகொண்டே இருக்கிறது. கூகுள் அலர்ட்ஸ் வாயிலாக அவை எனக்கு வந்து சேருகிறது. திருமணம் பற்றி வரும் தகவல் எதுவும் உண்மை இல்லை” என்றார்.