பஞ்சாப் மாநிலம் பட்டியாலா தொகுதியின் எம்.பி ஆக பிரனீத் கவுர் என்பவர் இருக்கிறார். இவர் காங்கிரஸ் முன்னாள் முதல்வரும் தற்போதைய பாஜக கட்சியின் மூத்த தலைவருமான அம்ரிந்தர் சிங்கின் மனைவி ஆவார். இந்நிலையில் எம்பி பிரனீத் கவுர் கட்சி விரோத செயல்களில் ஈடுபடுவதாக குற்றசாட்டுகள் எழுந்த நிலையில் காங்கிரஸ் கட்சியிலிருந்து அவரை இடைநீக்கம் செய்து மேலிடம் நடவடிக்கை எடுத்தது.‌

இதைத்தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவரும் பொதுச் செயலாளருமான தாரிக் அன்வர் பிரனீத் கவுருக்கு தற்போது நோட்டீஸ் அனுப்பியதோடு கட்சிக்கு எதிராக செயல்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகளுக்கு விளக்கமும் அளிக்க வலியுறுத்தியுள்ளார்.

ஆனால் பிரனீத் கவுர் மேலிடம் என் மீது நடவடிக்கை எடுக்கட்டும்.  எனக்கு என் தொகுதி மக்கள் தான் முக்கியம் என்பதால் என் தொகுதி குறித்த நலன்களுக்காக நான் தொடர்ந்து மத்திய மந்திரிகளை சந்திப்பேன் என்று கூறியுள்ளார். மேலும் நோட்டீஸ் அனுப்பியதற்கும் பிரனீத் கவுர் கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.