உத்தரப் பிரதேச மாநிலத்தில் மனைவியுடன் சென்ற நேம்பால் என்ற நபர் சில சமூக விரோதிகளால் கொடூரமாகத் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நேம்பாலின் மனைவியிடம் அந்த நபர்கள் அத்துமீறி நடக்க முயன்றதை அவர் தட்டிக்கேட்டதால், ஆத்திரமடைந்த அவர்கள் நேம்பாலை நடுரோட்டில் வைத்து லத்தி மற்றும் ஆயுதங்களால் கடுமையாகத் தாக்கி ரத்தக் காயங்களை ஏற்படுத்தியுள்ளனர்.

“>

தனது கணவரைக் காப்பாற்றச் சொல்லி அந்தப் பெண் கதறி அழுதபோதும், அந்த நபர்கள் சிறிதும் இரக்கமின்றித் தாக்குதலைத் தொடர்ந்தனர். இந்த கொடூரமான தாக்குதல் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், காவல் நிலையத்தினர் இந்தச் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.