தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் ஐஸ்வர்யா லட்சுமி. இவர் ஒரு வெற்றிகரமான தயாரிப்பாளராகவும் திகழ்கிறார். நடிகை ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில் கட்டாகுஸ்தி மற்றும் பொன்னியின் செல்வன் போன்ற திரைப்படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் தனது திரைப்பயணம் குறித்து ருசிகரமாக பேசியுள்ளார் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி.

இதுபற்றி அவர், உணவு பழக்கமே என்னை சினிமாவுக்கு அழைத்து வந்தது. எம்பிபிஎஸ் கடைசி ஆண்டு பரீட்சை எழுதி முடித்து ஓட்டலுக்கு சாப்பிட சென்றேன். அங்கு ஒரு ஆடிஷன் நடந்தது. ஜாலியாக பங்கேற்றபோது, தேர்வாகிவிட்டேன். அதுதான் எனது முதல் சினிமா அனுபவம். சினிமாவுக்கு வந்த பின் வார கடைசியில் மட்டும் பிடித்ததெல்லாம் சாப்பிடுவேன் என்றுள்ளார்.