பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் ஐஸ்வர்யா ராய். உலக அழகி பட்டத்தை வென்ற ஐஸ்வர்யா ராய் கடந்த 1997-ம் ஆண்டு மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த இருவர் படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமானார். அதன் பிறகு தமிழ் மற்றும் பாலிவுட் என இரு மொழிகளிலும் கவனம் செலுத்த ஆரம்பித்த ஐஸ்வர்யா ராய் முன்னணி நடிகையாக ஜொலித்தார். திருமணத்திற்கு பிறகு ஹிந்தி சினிமாவில் மட்டுமே கவனம் செலுத்தி வரும் ஐஸ்வர்யா ராய் நீண்ட இடைவேளைக்கு பிறகு தமிழில் மணிரத்தினம் இயக்கத்தின் வெளிவந்த பொன்னியின் செல்வன் படத்தில் நந்தினி கதாபாத்திரத்தில் நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சனை நடிகை ஐஸ்வர்யா திருமணம் செய்து கொண்ட நிலையில் ஒரு மகள் இருக்கிறார். தற்போது 50 வயது ஆன நிலையிலும் படங்களில் முக்கிய வேடத்தில் மட்டுமே நடிகை ஐஸ்வர்யா ராய் நடித்து வருகிறார். இந்நிலையில் 50 வயதிலும் நடிகை ஐஸ்வர்யாராயின் முகத்தில் சுருக்கங்கள் இல்லாமல் எப்படி இன்னும் இளமையாக சொல்கிறார் என ரசிகர்கள் ஆச்சரியப்பட்டதுண்டு. ஆனால் தற்போது குளோசப்பில் எடுக்கப்பட்ட தன்னுடைய புகைப்படத்தை ஐஸ்வர்யாராய் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராயின் முகத்தில் சுருக்கங்கள் தெரிகிறது. மேலும் எவ்வளவுதான் மேக்கப் போட்டு இருந்தாலும் வயது ஆக ஆக உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்பது முகத்தில் தெளிவாக தெரிகிறது என ரசிகர்கள் போட்டோவை பார்த்து கமெண்ட் செய்து வருகிறார்கள்.