பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் வித்யா பாலன். இவர் தமிழ் சினிமாவில் அஜித் நடிப்பில் வெளிவந்த நேர்கொண்ட பார்வை என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் நடிகை வித்யா பாலன் தன்னுடைய வாழ்க்கையில் நடந்த கசப்பான அனுபவம் குறித்து பேசியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, நான் ஒரு விருது வழங்கும் விழாவுக்கு சென்றிருந்தேன். அப்போது எனக்கு ஹேய் பேபி படத்தில் நடித்ததற்காக விருது வழங்கப்பட்டது.

அது ரசிகர்களின் ஆதரவை பெறாததற்கான விருது. அந்த விருதை அறிவித்த போது, என்னுடைய உடைகள் நான் தேர்வு செய்தது இல்லை. ஆடை வடிவமைப்பாளர் தேர்வு செய்து கொடுத்தது என்று கூறினேன். ஆனால் நான் சொன்னதை அவர்கள் கேட்கவில்லை. அந்த நேரத்தில் என்னால் தைரியமாக பேச முடியவில்லை. நான் விருதை அமைதியாக  வாங்கி  கொண்டேன். அன்று இரவெல்லாம் எனக்கு அவமானத்தை நினைத்து தூக்கம் வரவில்லை. சினிமா பின்னணி இல்லாமல் திரையுலகுக்கு வந்தால் இதுபோன்ற அவமானங்களை சந்திக்க நேரிடும் என்பதை புரிந்து கொண்டேன். மேலும் எனக்கும் மாடர்ன் உடைகளை விட புடவை அணிவதுதான் மிகவும் பிடிக்கும் என்று கூறினார்.