உத்திரபிரதேச மாநிலம் ஆக்ராவில் ஒரு அதிர்ச்சியான சம்பவம் நடந்துள்ளது. கேட்டை மூட மறுத்து விட்டதால் ஆத்திரமடைந்த பக்கத்து வீட்டுக்காரரிடம் பெண் ஒருவர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இது கடைசியில் கைகலப்பாக மாறியது. அப்போது ராம்வீர் பாகேல் என்ற நபரின் காதை ராக்கி என்ற அந்தப் பெண் கடித்து துண்டித்துள்ளார். அதன் பிறகு இது குறித்து அந்த நபர் போலீசில் புகார் அளித்த நிலையில் விசாரணையில் ராக்கி ராம்வீர் காதை கடித்து விழுங்கி விட்டதாக கூறியுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.