ஹரியானா மாநில குருகிராமில்,  ஒரு புலம்பெயர்ந்த தொழிலாளி தலைகீழாக கட்டப்பட்டு கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் நடைபெறும் வீடியோ சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

வீடியோவில், தொழிலாளி தாக்கப்படும்போது கண்ணீர் விட்டு கெஞ்சும் காட்சிகள் பதிவாகியுள்ளன. அருகிலிருந்த சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோதும், எவரும் உடனடியாக உதவி செய்யவில்லை. இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை தொடங்கியுள்ள நிலையில், நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது.

“>

 

தாக்கிய நபர் ஒப்பந்ததாரராக இருப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. சம்பவம் ஜூன் மாதத்தில் நடந்ததாக கூறப்பட்டாலும், தற்போது தான் அதன் வீடியோ வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதோ அந்த வீடியோ,