பிக்பாஸ்  சீசனில் நேற்றைய எபிசோடில் நடந்த ஒரு டாஸ்க்கில் போட்டியாளர்கள் பல தருணங்களில் பேசிய வார்த்தைகள் குறித்து காட்சிகள் ஒளிபரப்பப்பட்டது. அவற்றை பேசிய போட்டியாளர்கள் முன்வந்து அதை எந்த சூழலில் என்ன காரணத்துக்காக பேசினார்கள் என்பதை சக போட்டியாளர்களுக்கு விளக்க வேண்டும். அந்த வகையில் நிகழ்ச்சியின் தொடக்கத்தில் வினுஷாவின் உடல் அமைப்பு குறித்து நிக்ஸன் கூறிய சில வார்த்தைகள் தொலைக்காட்சியில் காட்டப்பட்டது. அது குறித்து விளக்கம் அளித்து வந்த நிக்சன் தான் அவ்வாறு பேசியது வினுஷாவுக்கு தெரியும் என்று தவறான நோக்கத்தில் அப்படி சொல்லவில்லை என்றும் கூறினார்.

இந்த நிலையில் வினுஷா உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். முதல் வாரத்தில் எனக்கும்நிக்சனுக்கும்  இடையே நல்ல புரிதல் இருந்தது. உண்மையாகவே நான் அவரை ஒரு தம்பியாகவே நினைத்தேன் .நான் பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்தபோது நிக்ஸன் என்னை பாடி ஷேமிங்க் செய்தது குறித்து என்னிடம் அவர் மன்னிப்பு கேட்கவோ அது குறித்து பேசவோ இல்லை. என்னிடம் இவர் இதனை சொல்லிவிட்டதாகவும் எனக்கு இது அனைத்துமே தெரியும் என்றும் தவறாக சொல்கிறார்.

பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பிறகுதான் இது குறித்து தெரிந்து கொண்டேன். ஒருவேளை இப்போது நிக்சன் மன்னிப்பு கேட்டிருந்தாலும் கூட அது அவரை ஒரு நல்ல மனிதனாக ஆகிவிடாது எனக்காக குரல் எழுப்பிய விசித்ராவுக்கு நன்றி. பிக் பாஸ் வீட்டில் இருந்த பொழுது நிக்ஸனின் மீது நான் நல்ல மரியாதை வைத்து நான் அவரை தம்பியாக நினைத்தேன். என்னைப் பற்றி அவர் கூறிய கருத்துக்களை பார்த்து பிறகு தான் அத்தனை மரியாதையும் போய்விட்டது என்று பதிவிட்டுள்ளார்.