பெரும்பாலும் வீடுகளில் செல்லப்பிராணியாக நாய் வளர்க்கப்படுகிறது. நாய் குழந்தைகளைப் போன்றே மிகவும் செல்லமாக வளர்க்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த நாய்கள் குழந்தைகளை பாதுகாப்பதில் இரண்டாவது பெற்றோராகவும் இருந்து வருகிறது. சில தருணங்களில் தங்களுடைய எஜமானுக்காக உயிரை காப்பாற்றுவதில் முக்கியமாக இருந்து உயிரை விடுவதையும் நம்மால் பார்க்க முடிகிறது.

அந்த வகையில் நாய் ஒன்று அமர்ந்திருந்த பெண்ணின் உயிரை நொடியில் காப்பாற்றும் சம்பவம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. தொடக்கத்தில் இந்த நாய் செய்வது குறித்து அந்த பெண்ணிற்கு கோபமாக இருந்துள்ளார். ஆனால் அதன் பிறகு சில நொடிகளில் தான் ஆபத்திலிருந்து தப்பித்துள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.