இந்தியாவின் பொதுத்துறை நிறுவனமான எல்ஐசி வாடிக்கையாளர்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்தவகையில் பெண்கள் பயன்பெறும் வகையில் ஆதார் ஷீலா என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த காப்பீடு திட்டத்தின் கீழ் நீங்கள் ஒரு நாளைக்கு ரூ.87 டெபாசிட் செய்தால் ஒரு ஆண்டுக்கு 31,755 வரை சேமிக்கலாம்.

அதே மூன்று ஆண்டுகளில் 31,7550 உங்களது பாலிசி கணக்கில் இருக்கும். அதிகபட்சமாக 70 வயது பூர்த்தி அடையும் வரை திட்டத்தில் தொடர்ந்தால் முதிர்வு காலத்தில் உங்களுக்கு ரூ.11 லட்சம் வரை திரும்ப கிடைக்கும். திட்டத்தின் சிறப்பு என்னவென்றால் பாலிசிதாரர் எதிர்பாராத விதமாக உயிரிழக்கும் பட்சத்தில் தொகையானது அவரின் குடும்பத்திற்கு வழங்கப்படும்.