தமிழகத்தில் குற்றவாளி யாராக இருந்தாலும் எந்த கொம்பனாக இருந்தாலும் காப்பாற்ற மாட்டோம் என சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். திமுக அரசு பொறுப்பேற்றதிலிருந்து குற்றவாளியை தப்ப விடவும் இல்லை காப்பாற்றவும் இல்லை. காவல்துறையினரின் செயல்பாட்டில் குற்றம் குறை இருக்கலாம், குறையே இல்லை என்று சொல்ல மாட்டோம், தவறை திருத்திக் கொள்ளும் பண்பை காவல்துறை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

குற்றவாளியை தப்ப விட்டதாகவோ குற்றவாளியை காப்பாற்றியதாகவோ இதுவரை நடக்கவில்லை. குற்றவாளி யாராக இருந்தாலும் எந்த கொம்பனாக இருந்தாலும் காப்பாற்ற மாட்டோம் என உறுதி கூறுகிறேன் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.