விருதுநகர் மாவட்டத்தில் சிறுமி உட்பட 2 பேருக்கு தற்போது டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து அவர்களுக்கு விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. அத்துடன், 20 படுக்கைகள் கொண்ட தனிப்பிரிவு தயார் நிலையில் உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதற்கு முன்னதாக, வேலூரைச் சேர்ந்த 18 வயது மாணவிக்கும், சலவன்பேட்டையைச் சேர்ந்த ஆண் குழந்தைக்கும் டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில் தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் மேலும் அதிகரிக்கும் என்பதால், தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்துமாறு அதிகாரிகளை, மக்கள் நல்வாழ்வு துறை செயலர் ககன்தீப் சிங் பேடி கேட்டுக்கொண்டுள்ளார். தற்போது வரை தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் 400 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை டெங்கு பாதித்து 3 பேர் வரை உயிரிழந்துள்ளனர். அதனால் சிறிய அளவில் காய்ச்சல் ஏற்பட்டாலும் உடனே மருத்துவ மனை செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.