காட்டின் சட்டம் ‘வலிமையானவை மட்டுமே பிழைக்கும்’ என்றுதான். அதனால்தான் சிங்கங்கள் காட்டின் ராஜாக்களாகக் கருதப்படுகின்றன. அவை பலமாக இருப்பதால்தான், மிகப்பெரிய விலங்குகளைக் கூட வேட்டையாட முடிகிறது. இருப்பினும், சில தருணங்களில் விலங்குகளிடையே காணப்படும் ஒற்றுமை, அந்த சக்தியைக் கூட துளைக்கக்கூடியதாக மாறுகிறது என்பதைச் சுட்டிக் காட்டும் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவில், சிங்கங்களின் தாக்குதலில் சிக்கிய ஒரு எருமை, அதன் கூட்டத்தினால் அற்புதமாக மீட்கப்படுகின்றது. தானாகவே தப்பிக்க முயலும் அந்த எருமை, தரையில் சிங்கங்கள் தாக்க  முயற்சிக்கின்ற போது, திடீரென அதன் கூட்டத்தினர் வரிசையாக விரைந்து வந்து தாக்குதல் நடத்துகிறார்கள்.

 

முதலில் ஒரு எருமை வருகிறது, பின்னர் பல எருமைகள் ஒன்று சேர்ந்து சிங்கங்களை நோக்கி விரைகின்றன. இதனால் பீதி அடைந்த சிங்கங்கள், தங்கள் முயற்சியை கைவிடுகின்றன. இந்த வீடியோவின் மூலம், ஒற்றுமையும் நட்பும் உயிர்காக்கும் ஆயுதமாக இருப்பதைக் காட்டுகிறது.

மேலும் இந்த 29 வினாடிகள் கொண்ட காணொளி, சமூக வலைதளமான ‘X’  @TheeDarkCircle என்ற கணக்கிலிருந்து பகிரப்பட்டுள்ளது. அதில், “ஒரு உண்மையான நண்பர் உங்களை ஒருபோதும் விட்டுவிடமாட்டார்” என்ற வாசகமும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வீடியோ இதுவரை 68 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முறை பார்வையிடப்பட்டுள்ளதுடன், நூற்றுக்கணக்கானோர் இதனை விரும்பியும் பகிர்ந்தும் வருகின்றனர்.