சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை உள்ளிட்ட படங்களை இயக்கிய ஒபலி என்.கிருஷ்ணா டைரக்டில் சிம்பு நடித்து வரும் படம் “பத்து தல”. ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கும் இந்த படத்தில் சிம்புவுடன் கவுதம் மேனன், கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கலையரசன் போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து உள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இந்த படம் வரும் 30ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

இந்நிலையில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா பேட்டியளித்தபோது ” சிம்புவுக்கு பெரிய மனம் இருக்கிறது. வெளியே எங்களை வைத்து சர்ச்சை கருத்துகளை பரப்பினர். எங்களுக்குள் அப்படி எதுவுமில்லை. நான் 18 ஆண்டுகளாக சிம்புவிடம் எப்படி பழகி கொண்டு இருந்தேனோ அதே உறவுதான் இப்போதும் இருக்கிறது. என்றைக்கும் அது மாறவில்லை என அவர் பேசினார்.