தமிழ் சினிமாவில் கோமாளி என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு லவ் டுடே என்ற படத்தை பிரதீப் ரங்கநாதன் அவரே இயக்கி நடித்தார். இந்த படம் சூப்பர் ஹிட் ஆனது. இரு படங்களின் வெற்றியால் பிரதீப் ரங்கநாதனின் அடுத்த படம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஏதாவது புதிய படத்தை இயக்குவாரா அல்லது படத்தில் நடிக்கப் போகிறாரா என்று ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இந்நிலையில் பிரதீப் ரங்கநாதனை வைத்து இயக்குனர் விக்னேஷ் சிவன் ஒரு புதிய படத்தை இயக்கப் போவதாக அண்மைக்காலமாகவே தகவல்கள் வெளி வருகிறது. தற்போது இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதனுடன் சேர்ந்து நயன்தாராவை நடிக்க வைக்க விக்னேஷ் சிவன் திட்டமிட்டுள்ளதாக புதிய தகவல் வெளிவந்துள்ளது. மேலும் இப்படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்காமல் முக்கியமான கதாபாத்திரத்தில் தான் நடிக்கிறார் என்றும் கூறப்படுகிறது. ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை.