ஐ ஆர் சி டி சி முதல் அம்பேத்கர் சுற்று வட்டார சுற்றுலா ரயில் சேவையை தொடங்கியுள்ளது. எட்டு நாட்கள் அளவிலான இந்த சிறப்பு பயணத்தில் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் வாழ்க்கையுடன் தொடர்புடைய முக்கிய இடங்களுக்கான பயணம் அடங்கும். மேலும் ராமாயண சுற்று,பௌத்த சுற்று மற்றும் வடகிழக்கு சுற்று ஆகிய சிறப்பு சுற்றுலா சுற்றுகளின் பட்டியலில் அம்பேத்கர் சுற்று நான்காவது சேர்க்கப்பட்டுள்ளது.

தேக்கோ அப்னா தேஷ் திட்டத்தின் கீழ் பாரத் கௌரவ் சுற்றுலா ரயில் இயக்கப்படுகின்றது. இது சுற்றுலா துறை அமைச்சகம் மற்றும் ரயில் துறை அமைச்சகம் ஆகியவற்றுக்கு இடையே உள்ள ஒரு கூட்டு ஒத்துழைப்பு முயற்சியாகவும் பார்க்கப்படுகிறது.