திரைப்பட பின்னணி பாடகி சின்மயி குடும்பத்தினரிடம் நூதன முறையில் பண மோசடி செய்யப்பட்டுள்ளதாக, சைபர் கிரைம் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தனது சமூகவலைதள பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், தன்னுடைய குடும்பத்தாரிடம் லட்சக்கணக்கில் மோசடி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

OTP எண்ணை பகிராமலேயே இந்த மோசடி செய்யப்பட்டுள்ளதாகவும், செல்போனுக்கு வந்த லிங்கை க்ளிக் செய்ததும், வங்கிக் கணக்கில் இருந்த பணம் முழுவதும் காணாமல்போனதாகவும் அவர் பதிவிட்டுள்ளார். பெரும்பாலும் வயதானவர்களை குறிவைத்தே இத்தகைய மோசடிகள் அரங்கேறி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.