பிரபல ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தமிழா தமிழா  நிகழ்ச்சி மக்கள் விரும்பி பார்க்கும் நிகழ்ச்சியாக இருக்கின்றது. விவாத நிகழ்ச்சியாக இருக்கும் இந்த நிகழ்ச்சி  நீயா நானாவைப் போன்று ஒரு தலைப்பு எடுத்து அதில் குழுவாக சேர்ந்து விவாதிக்கப்படுகின்றது. இந்த நிகழ்ச்சியை முன்னதாக  கரு. பழனியப்பன்   தொகுத்து வழங்கிய நிலையில், தற்போது  ஆவுடையப்பன் தொகுத்து வழங்கி வருகின்றார்.

இதில் இந்த வாரம் எடுத்துக் கொண்ட தலைப்பு  “துணையை இழந்த பெற்றோர் தனது குழந்தைகளை எவ்வாறு வளர்த்துள்ளனர்” என்பதுதான். இதில் பெண் ஒருவர் தனது தந்தை வளர்த்த விதத்தினை கூறியதுடன்,  அவருக்காக பாடிய பாடல் ஒட்டுமொத்த கண்களையும் குளமாக்கியுள்ளது.

https://youtu.be/7i2EwkMyhmI