தமிழகத்தில் கடந்த 4 மாதங்களாக கொரோனா தொற்றுப் பரவல் குறைந்திருந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் தற்போது மாநிலத்தில் கொரோனா சிகிச்சையில் இருப்பவரின் எண்ணிக்கை 235 ஆக உயர்ந்துள்ளது. மேலும் புதிதாக 37 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட திருச்சியை சேர்ந்த 27 வயது இளைஞர் நேற்று முன்தினம் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் முக கவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றுதல் உள்ளிட்ட கொரோனா தடுப்பு வழிமுறைகளை தவறாது மக்கள் பின்பற்ற வேண்டும் என்று பொது மக்களுக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அறிவுறுத்தியுள்ளது.