துருக்கி மற்றும் சிரியாவில் கடந்த 6 ஆம் தேதி அதிபயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தினால் சுமார் 45 ஆயிரம் மக்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளனர். இங்கு ஏற்பட்ட நிலநடுக்கத்தை தொடர்ந்து உலகின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் ஜப்பான் நாட்டின் முக்கிய தீவான ஹொய்கைடோ பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவாகியுள்ளது என ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த நிலநடுக்கத்தினால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. இதனை அடுத்து நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.