நேற்று முன்தினம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய இரண்டு அணிகளும் மோதின. அதில் சென்னை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த நிலையில் தோனி குறித்து ஆண்ட்ரே ரஸல் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், இந்த மனிதர் உலகில் அதிகம் நேசிக்கப்படும் கிரிக்கெட் வீரர் என்று நான் நினைக்கின்றேன் என பதிவிட்டிருந்தார். முன்னதாக தோனி மைதானத்திற்குள் வரும்போது ரசிகர்கள் எழுப்பிய சத்தத்தை தாங்க முடியாமல் இவர் தனது காதுகளை மூடிக்கொண்ட வீடியோ காட்சி இணையத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது.

மேலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி அரிய சாதனை படைத்துள்ளார். ஐபிஎல் வரலாற்றில், சேஸிங்கில் அதிக முறை ஆட்டமிழக்காமல் இருந்த பேட்ஸ்மேன் என்ற சாதனையை தோனி படைத்துள்ளார்.