தமிழகத்தில் வருகின்ற நவம்பர் 12ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் பட்டாசு விற்பனை சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இந்த நிலையில் அண்மையில் நடந்த அடுத்தடுத்த வெடி விபத்துகளால் பலரும் உயிரினந்தனர். இதனால் உரிய அனுமதி பெற்று பட்டாசு விற்பனை செய்ய வேண்டும் என்றும் உரிமையின்றி பட்டாசு விற்றால் குற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. தற்காலிக பட்டாசு உரிமம் பெற இ சேவை மையங்களில் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும் என்று அரசு தெரிவித்துள்ளது.