தமிழகத்தில் வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களில் பயணிகளின் வசதிக்காக தமிழ்நாடு போக்குவரத்து கழகம் சார்பாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றது. அதனால் பெரும்பாலான பயணிகள் அரசு பேருந்துகளில் செல்வதற்கு ஒரு மாதத்திற்கு முன்பாகவே முன்பதிவு செய்வதால் சிறப்பு பேருந்து டிக்கெட்டுகளும் விரைவில் காலியாகி விடுகின்றன. இதனால் வேறு வழி இல்லாமல் பயணிகள் பலரும் தனியார் ஆம்னி பேருந்துகளில் பயணிக்கின்றனர்.

ஆனால் இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி ஆம்னி பேருந்துகளில் பண்டிகை நாட்களில் இரட்டிப்பு கட்டணம் வசூல் செய்யப்படுகின்றது. இந்த நிலையில் அடுத்த மாதம் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூல் செய்தால் பயணிகள் புகார் அளிக்கலாம் என்று மதுரை மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூல் செய்தால் 9384808393 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.