நாமக்கல் அருகே உயிரோடு இருக்கும் தாய்க்கு மகன் கோவில் கட்டி சிலை வைத்த சம்பவம் நிகழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நாமக்கல் அருகே ரெட்டிபட்டி சக்தி நகர் பகுதியை சேர்ந்த வாசு மற்றும் மணி தம்பதியினருக்கு பிரபு என்ற மகனும் ஜீவா என்ற மகளும் உள்ளனர். இவர்கள் சிறுவயதாக இருக்கும் போதே தந்தை வாசு உயிரிழந்து விட்டார். தாயார் மணி தனது குழந்தைகளை பல்வேறு கஷ்டங்களை அனுபவித்து வளர்த்து வந்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து பிரபுக்கு உயிருடன் உள்ள தனது தாய்க்கு சிலை வடித்து கோவில் கட்ட வேண்டும் என்று சிறுவயதில் இருந்து ஆசை இருந்ததால் தனது வீட்டிற்கு அருகே 1200 சதுர அடி நிலம் வாங்கி கோவில் போன்று கட்டி அதில் மூன்று அடி உயரத்தில் தனது தாய்க்கு சிலை வைத்துள்ளார். பொதுவாக இறந்தவர்களுக்கு சிலை வைத்து வரும் நிலையில் உயிருள்ள தனது தாய்க்கு சிலை வைத்திருக்கும் மகனின் செயல் பலரையும் நெகிழ வைத்துள்ளது.