சில நிகழ்வுகளைப் பார்த்தால், மனிதர்களை விட விலங்குகளிலும், பறவைகளிலும் நன்மையும் மனிதாபிமானமும் இருப்பதாகத் தோன்றுகிறது. தற்போது அப்படி ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் காகம் ஒன்று தண்ணீரில் இருந்து வெளியே வந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மீனை பிடித்து, அதை உண்ண முயற்சி செய்து கொண்டிருந்தது. அந்த நேரத்தில் நாரை ஒன்று மீனை அதன் கொக்கில் பிடித்துச் சென்று தண்ணீரில் விடுவித்தது. இந்த வீடியோ நெட்டிசன்கள் பலராலும் பகிரப்பட்டு வருகிறது.