உயர் சிறப்பு மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை வருகின்ற டிசம்பர் 31ம் தேதியுடன் நிறைவடைய உள்ளதாக தேசிய மறுத்து ஆணையம் தெரிவித்துள்ளது. முதுநிலை மருத்துவம் மற்றும் உயர் சிறப்பு மருத்துவ படிப்புகளுக்கான கால அளவு, வகுப்புகள் தொடங்கும் தேதிகளை மாற்றியமைக்க வேண்டிய அவசியம் இருந்த போது அதற்காக முதுநிலை மருத்துவ கல்வி வாரிய விதிகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு அது நடைமுறைப்படுத்தப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த மூன்று ஆண்டுகளாக கொரோனா காரணமாக உயர் சிறப்பு மருத்துவ படிப்புகளுக்கான வகுப்புகள் உரிய நேரத்தில் தொடங்கப்படவில்லை. இந்த ஆண்டு அந்த வகுப்புகள் கடந்த மாதமே தொடங்கப்பட்டு விட்ட நிலையில் அந்த படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை அனைத்தும் டிசம்பர் 31ம் தேதியுடன் நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.