சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக நீதிபதி எஸ்.வைத்தியநாதன் நியமனம் செய்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

நேற்று மாவட்ட நீதிபதிகள் 4 பேர் சென்னை உயர்நீதிமன்றம் கூடுதல் நீதிபதிகளாக பதவி ஏற்றுக்கொண்டனர். மாவட்ட நீதிபதியாக பணியாற்றிய ஆர்.சக்திவேல், பி.தனபால், சின்னசாமி குமரப்பன், கே.ராஜசேகர் ஆகியோரை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க கடந்த மார்ச் மாதம் கொலிஜியம் பரிந்துரை செய்தது. அதற்கு மத்திய அரசும் ஒப்புதல் அளித்தது. அந்த வகையில் 4 பேரும் நேற்று உயர்நீதிமன்ற நீதிபதிகளாக பதவியேற்று கொண்டனர்.