திருவண்ணாமலை மாவட்டம் அரியப்பாடி கிராமத்தில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்துவதற்கு அரசு முடிவு செய்துள்ளது. இதனால் பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டுவதற்கு இடம் தேவைப்பட்டுள்ளது.

இதை அறிந்து கொண்ட அதே கிராமத்தை சேர்ந்த கோபு என்பவர் தனக்கு சொந்தமான ஐந்து சென்ட் இடத்தை பள்ளிக்கு தானமாக கொடுத்துள்ளார். இதனை பாராட்டும் விதமாக கோட்டாட்சியர் தனலட்சுமி கோபுவை நேரில் வரவழைத்து பாராட்டியுள்ளார்.