தேனி மாவட்டம் ராசிங்காபுரத்தில் உள்ள திருமூலம்மாள் கோவிலில் பரம்பரை பூசாரிகளாக இருப்பவர் ராஜன். இவர் கோவில் அம்மனுக்கு நன்கொடைகள் மூலமாக செய்யப்பட்ட 11 பவுன் தங்க நகைகளை பொருளாளர் முத்துசாமியின் மகன் அழகர்சாமியிடம் கொடுத்து பாதுகாப்பாக வைத்திருக்க கூறியுள்ளார். இந்நிலையில் அம்மனுக்கு நகைகளை சாத்துவதற்காக அழகர்சாமியிடம் நகைகளை கொண்டு வரும்படி கோவிலில் கேட்டுள்ளனர். ஆனால் அவர் எடுத்து வரவில்லை.

இது குறித்து விசாரித்தபோது அவர் நகைகளை அடகு வைத்திருப்பதாகவும் விரைவில் மீட்டு தருவதாகவும் கூறியுள்ளார். ஆனால் பல நாட்கள் ஆகியும் நகையை மீட்டுக் கொடுத்ததால் கோவில் நிர்வாகத்தினர் அழகர்சாமியின் வீட்டிற்கு சென்று நகையை மீட்டு தரும்படி கேட்டுள்ளனர்.

அப்போது அழகர்சாமி மற்றும் அவரது உறவினர்களான ராமர், பழனி, மணி ஆகியோர் சேர்ந்து கோயில் பூசாரி ராஜன் மற்றும் நிர்வாகிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.