காஞ்சிபுரம் மாவட்டம் விஷார் கிராமத்தை சேர்ந்தவர் சங்கீதா. கணவனை இழந்த இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். சங்கீதா ஸ்ரீபெரும்புதூர் அடுத்துள்ள பிள்ளைப்பாக்கம் பகுதியில் தனியார் தொழிற்சாலை ஒன்றில் தொழிலாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்து திங்கட்கிழமை பணியில் ஈடுபட்டிருந்த சங்கீதாவின் மீது இயந்திரம் ஒன்று மோதி பலத்த காயமடைந்தார்.

இதனைத் தொடர்ந்து சங்கீதாவை தொழிற்சாலை நிர்வாகத்தினர் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.