இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் வீடியோக்கள் செய்து பலரும் பிரபலமடைந்து வருகின்றனர். அதன்படி சதீஷ் மற்றும் தீபா தம்பதியினர் குடும்பமாக சேர்ந்து பல நகைச்சுவையான வீடியோக்களை வெளியிட்டு பிரபலமான ஜோடி. இந்நிலையில் இரவு நேர சாப்பாட்டிற்கு சதீஷிடம் மனைவி தீபா உப்புமா செய்து தரவா என கேட்டுள்ளார். அதற்கு சற்று யோசித்த சதீஷ் இல்லை தோசை வேண்டும் என கூறியுள்ளார். தோசைக்கு தொட்டுக்கொள்ள என்ன வேண்டுமென தீபா கேட்க அதோடு குருமா இருக்கிறது என்றால் 15 தோசை தயார் செய்ய வேண்டும் சட்னி இருக்கு என்றால் எட்டு தோசை தயார் செய்ய வேண்டும் என தனக்குள் தீபா யோசித்துக் கொண்டிருக்கும் போது சதீஷ் தொட்டுக்கொள்ள என்ன இருக்கு என கேட்டுள்ளார்.
அதற்கு பயந்தபடி சிரித்துக் கொண்டு தொட்டுக்கொள்ள மிளகாய் பொடி மட்டும்தான் இருக்கு என தீபா கூறியுள்ளார். உடனே சதீஷ் 18 தோசை சுடு என கூறியுள்ளார். காரணம் அவருக்கு தோசை என்றால் பிடிக்கும் தொட்டுக்கொள்ள எதுவாக இருந்தாலும் பரவாயில்லை என்பதுதான். இந்த வீடியோ தற்போது வைரலாகி வர இதனை பார்த்த இணையவாசிகள் பலரும் இப்படி தான் வீடுகளில் பலரும் வாழ்ந்து வருகிறார்கள் என கலாய்க்கும் வகையில் பதிவு செய்து வருகிறார்கள்.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க